14 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 10

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 10


இஃதிகாப் 

➿➿➿➿➿


• எல்லா நேரத்திலும் இஃதிகாப் இருக்கலாம்.


• ஆகக் குறைந்தது ஒரு இரவு ஒரு பகள் இஃதிகாப் இருக்க வேண்டும்.

 ( நோன்போடுதான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை இல்லை) 


• பள்ளிகளில்தான் இஃதிகாப் இருக்க வேண்டும். 


• பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். 


• ரமழானில் மிகவும் வழியுருத்தப்பட்டிருக்கிறது குறிப்பாக கடைசிப் பத்தில்


• இஃதிகாபிற்குச் சென்றால் முயற்சி செய்து அமல்கள் செய்வது சிறந்தது. 


• ரமழானுடைய ஒற்றைப்படையான லைலத்துல் கத்ருடைய தேடல்களில் இஃதிகாப் இருந்து கொள்வது மிகவும் சிறந்தது. 


• அவசியமான தேவைகளை தவிர பள்ளியில் இருந்து வெளியேறக் கூடாது. 


ஹஜ் 

✳✳✳


• முஸ்லிமான பருவ வயதை அடைந்த புத்தி சுவாதீனமுள்ள ஒவ்வொருவரின் மீதும் ஹஜ் செல்வதற்கான பொருளாதார வசதி இருந்தால் அவர் மீது ஹஜ் கடமை. நிபந்தனைகள் பூர்த்தியாகி விட்டால் பிற்போடாது உடனடியாக குறித்த வருடத்திற்கான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.  இதே போன்றூதான் உம்றாவும். 

இஹ்ராம் (நிய்யத்) 


• தமத்துஃ, கிரான், இப்ராத் இதில் எந்த வகை ஹஜ் என்பதை நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். முதல் வகை (தமத்துஃ) சிறந்ததாகும். 


• நிய்யத் வைப்பதற்கென்று இஸ்லாம் சில மீகாத்துகளை(எல்லைகளை) சொல்லி இருக்கிறது. குறித்த எல்லைகளில் வைத்தே நிய்யத் வைக்க வேண்டும். 


• யார் குறித்த எல்லைகளுக்கு உட்பட்டவராக இருக்கிறாறோ அவர் அவருடைய இடத்திலிருந்தே நிய்யத் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக மக்கா வாசிகள் மக்காவில் வைத்து நிய்யத் வைக்கலாம். 


இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்ட விடயங்கள் 

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳


• மேலாடை, தலைப்பாகை, கோட், கீழாடை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை, சப்பாத்து போன்றவைகள்  அணியக் கூடாது. ஒருவருக்கு சப்பாத்து தவிர்ந்த வேறு செருப்புக்கள் இல்லாவிட்டால்  அவர் கரண்டைக் காலுக்கு மேலுள்ள பகுதியை வெட்டி விட்டு அணிந்து கொள்ளலாம். (வெட்டுதல் கடமை இல்லை. விரும்பினால் வெட்டிக் கொள்ளலாம். விரும்பினால் அப்படியே அணிந்து கொள்ளலாம்)


• பெண்கள் முகத்திரை, கையுரை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை அணியக் கூடாது. (பெண்கள் முகத்திரை மற்றும் கையுரை அணியக்கூடாது என்ற அறிவிப்பு இப்னு உமர் (ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாகும். நபி (ஸல்) வழியாக அறிவிக்கக் கூடிய செய்தி ஷாத்தானதாகும். இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூட இந்த கருத்தை வழியுறுத்தியிருக்கிறார்கள்) 


• ஆரம்பமாக வாசனை பூசக் கூடாது. (ஏற்கனவே பூசப்பட்ட ஆடையும், உடலில் வாசம் பூசுவதும் விதிவிலக்கானது இஹ்ராத்துகென்று அணியப்பட்ட ஆடையில் பூசக்கூடாது) 


• முடியை களையக் கூடாது நியாயமான காரணங்கள் இருந்தாலே தவிர. (நியாயமான காரணங்களுக்காக ஒருவர் முடியை களைந்தால் அவர் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்) 


• கெட்ட வார்த்தைகள், மோசமாக நடந்து கொள்ளல், பாவம் செய்தல், வீண் தர்க்கங்களில் ஈடுபடல், திருமணம் செய்தல், செய்வித்தல் மற்றும் திருமணப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுதல் போன்றவைகள் கூடாது. 


• வேட்டையாடுதல் கூடாது. யாரொருவர் அப்படி கொன்று விடுகிறாரோ அதற்கு பரிகாரமக அதே போன்ற பிரிதொன்றை கொடுக்க வேண்டும். 


• பிரர் வேட்டையாடியதை சாப்பிடக் கூடாது. இஹ்ராமுடையவர் வேட்டையாடாதவாராகவும் அல்லது தன்னுடைய விருப்பத்தின் பெயரில் வேட்டையாடப்படாததாகவும் இருந்தால் அதை சாப்பிடுவதில் குற்றமில்லை. 


• இத்ஹிர் என்ற புல் வகையைத் தவிர மற்ற எந்த வகை தாவரங்களையும் சேதப்படுத்தல் கூடாது. 


• ஐந்து வகையான தீங்கிழைக்கக் கூடிய பிராணிகளை கொல்வதில் குற்றமில்லை. (வல் காகம், எலி, தேள், வெறி பிடித்த நாய், பாம்பு)


• மக்காவுடைய புனித பூமியுடைய சட்டங்கள் அனைத்தும் மதீனா புனித பூமிக்கும் பொருந்தும். 


• தாவரங்களை வெட்டக் கூடாது சேதப்படுத்தக் கூடாது என்பதில் அதனுடைய சொந்தக் காரர் அவர் வெட்டி சேதப்படுத்தாத வரை அவருக்கு அதை பயன்படுத்துவது கூடும். 


• தாயிப் எனும் ஊரிலுள்ள வஜ்த் எனும் பிரதேசத்திலும் வேட்டையாடுதல் மற்றும் தாவர வகைகளை வெட்டுதல், சேதப்படுத்தல் கூடாது. (அபூதாவுடைய வரக்கூடிய இந்த செய்தி பலவீனமானது)

12 Sept 2021

தனது செல்வம்...



இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் அவனுடைய செல்வம், தன்னை மரணமே வராமல் நிலையாக வைத்திருக்கும் என்று நினைப்பதில்லை. 

 கேட்டால் அப்படியில்லை என்றுதான் சொல்லுவான். 
 
மனிதனைப் படைத்து அவன் உள்ளங்களின் ஊசலாட்டத்தையும் அறியக் கூடிய ஏக இறைவனாகிய அல்லாஹ், செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று மனிதன் எண்ணுவதாக கூறுவதில் முரண்பாடு போல் தோன்றினாலும் அதில் எந்தவொரு முரண்பாடும் கிஞ்சித்தும் இல்லை. 
 
உண்மையில் மனிதன் தனது சொல்லால் அப்படிச் சொல்லாவிட்டாலும் செல்வம், தன்னை நிலையாக வைக்கும் என்பது போலத்தான் அவனுடைய உலக காரியங்கள் வியாபித்து இருக்கின்றன. 
 
இந்த உலகத்திலே நிரந்தரமாக வாழ வந்தவன் போல் செல்வத்தைக் கொண்டு பெருமை அடிக்கிறான்; தான தர்மங்களை விட்டும் பராமுகமாக இருக்கிறான்; தனது செல்வச் செறுக்கால் பலவீனமானவர்களை இழிவாகக் கருதுகிறான்; ஆடம்பரம், வீண் விரயங்களை கௌரவமாக கருதுகிறான்.
 
எந்த நேரத்திலும் மரணம் தன்னை நெருங்கும் என்ற சிந்தனை அற்று, அதற்கான மறுமை சேகரிப்பை புரக்கணித்து, செல்வச் செழிப்பில் உலகம் அவனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறியாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறான். 
 
இதே கருத்தைதான் அல்லாஹ் அவனது அருள் மறையில் இன்னோரிடத்தில் மிகத்தெளிவாக விபரித்து இவ்வாறு கூறி இருப்பதை அவதானிக்கலாம்.
 
وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌‏
 
 
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
(அல்குர்ஆன் : 26:129)

 

8 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 09

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 09


நோன்பு

⚪⚪⚪⚪


• நம்பிக்கையான, நேர்மையான முஸ்லிம் பிறையைக் கண்டால் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப். அல்லது ஷஃபான் முப்பதாக பூர்த்தியாகிவிட்டாலும் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப்.


• 30 நாட்கள் ரமழானில் நோன்பு நோற்க வேண்டும். 30ஆவது இறவில் பிறை தென்பட்டாலே தவிர. 


• ஒரு ஊரிலே பிறை கண்டால் அந்த ஊருடைய உதயத்திற்கு ஒத்த ஊர்கள் அனைத்தும் நோன்பு வைக்க வேண்டும். 


• நோன்பு பிடிக்கின்றவர் பஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைத்தல் வேண்டும்.  


நோன்பை முறிக்கக் கூடிய விடயங்கள் 

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• சாப்பிடுவது 

• குடிப்பது 

• கணவன் மனைவி உறவு கொள்வது 

• தேவையேற்பட்டு வலிந்து வாந்தி எடுத்தல்


o தொடர்சியாக நோன்பு நேற்றல் கூடாது ( சஹரிலிருந்து அடுத்த நாள் மஃரிப் வரை அல்லது அதற்கடுத்த நாள் மஃரிப் வரை தொடர்தல்) 


o கணவன் மனைவி உறவு மூலம் யார் நோன்பை முறித்து விட்டாரோ அவர் லிஹாருடைய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். ( வேண்டுமென்று அல்லாமல் மறதியினால் அல்லது உணர்ச்சி மேலீட்டால் கணவன் மனைவி உறவு ஏற்பட்டால் ஓர் அடிமையை உரிமை விடல் வேண்டும் அல்லது தொடர்ச்சியாக விடாமல் 60 நாட்கள்  நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்) 


o நோன்பு திறத்தலை அவசரப்படுத்துதலும் சஹரை பிற்படுத்துதலும் சிறந்தது. 


o மார்க்க ரீதியான காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விட்டால் அவர் கழா செய்ய வேண்டும். 


o பிரயாணிக்கு நோன்பை விடுவது சலுகை வழங்கப்பட்டிருக்கிறது


o யுத்த களத்தில் அல்லது பிரயாணத்தில் ஒருவர் அழிவை பயந்தால் அவர் நோன்பை விடுவது வாஜிப். 


o நோன்பு கடமையான நிலையில் ஒருவர் மரணித்தால் அவருடைய பொறுப்பாளர் அவர் சார்பாக நோன்பு வைக்க வேண்டும். (நேர்ச்சை நோன்பாக இருந்தால்தான் பொறுப்பாளர் நோன்பு வைக்க முடியுமே தவிர ரமழானுடைய கழா நோன்புக்காக அல்ல. ரமழானுடைய கழா நோன்புக்காக பொறுப்பாளர்கள் விட்ட நோன்புக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) 


o வயதாகி முதிர்ந்து போய் நிரந்தர நோயாளியாக நோன்பை பிடிக்க முடியாதவர்கள் ( நிரந்தரமாக கழா செய்யவும் முடியாதவர்கள்) விட்ட ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளித்தல் வேண்டும். 


o சுன்னத்தான நோன்பை பொறுத்தவரை அவர் விரும்பினால் விடலாம் அல்லது தொடரலாம். கழாவும் கிடையாது குற்றப் பரிகாரமும் கிடையாது. 


சுன்னத்தான நோன்புகள்

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு பிடித்தல். (ஷவ்வாலுடைய ஆரம்பத்திலிருந்து தொடர்தேர்ச்சியாக  பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஷவ்வால் மாதத்திற்குள் பிடிக்க வேண்டும்) 


• துல் ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது நாள் அறபா தின நோன்பு பிடித்தல்.


• முஹர்ரம் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• ஷஃபான் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• திங்கள், வியாழன் நேன்பு வைத்தல்


• ஐயாமுல் பீலுடைய நாட்களில் நோன்பு பிடித்தல். (மாதத்தில் வெள்ளை நாட்கள் என்று சொல்லக்கூடிய 13,14,15 நாட்கள்; இது அல்லாமல் மாதத்தில் 3 நாட்கள் பிடிப்பதும் சிறந்தது) 


• சுன்னத்து நேன்புகளிலே சிறந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு பிடிப்பதாகும். 


o காலம் முழுதாக நோன்பு பிடிப்பது வெறுக்கத்தக்கது. 


o சனிக்கிழமை தனியாகவோ அல்லது வெள்ளிக்கிழமை தனியாகவோ நோன்பு பிடித்தல் கூடாது. (தொடர்ந்து ஒருவர் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது சிறப்பாக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளையோ பிடிப்பதாக இருந்தால் அவர் இந்த சட்டத்திற்குள் வரமாட்டார் விரும்பி தேர்ந்தெடுத்துப் பிடிப்பதையே  குறிக்கும்) 


o பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பது கூடாது. 


o ஐயாமுத் தஷ்ரீக்குடைய அதாவது துல்ஹிஜ்ஜாவுடைய 11,12,13 நாட்களில் நோன்பு பிடித்தல் கூடாது. (தமத்துஃ ஹஜ் செய்தவர் குர்பான் கொடுக்க வசதி இல்லாவிட்டால் அவர் வைக்க வேண்டிய பத்து நோன்பில் மக்காவில் வைத்து பிடிக்க வேண்டிய மூன்று நேன்புகளில் இந்த மூன்று நாட்கள் விதிவிலக்காகும்) 


o ரமழானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நேன்பு வைக்கக் கூடாது.

4 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 08

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 08


தங்கம் வெள்ளியுடைய ஸகாத்

*************************************

•தங்கத்திலோ வெள்ளியிலோ ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால் பத்தில் ஒன்றில் கால்வாசில் ஒன்றில் கால்வாசில் ஒன்று கொடுக்க வேண்டும். அதாவது 2.5% சதவீதமாகும். அது அதனுடைய நிஸாபை(எல்லையை) அடையும் பட்சத்தில்.


•தங்கத்தினுடைய நிஸாப் 20 தீனாராகும். அதாவது 10.5 பவுன் அல்லது 85 கிராம் எனும் அன்னலவான எடுகோளை எடுக்கலாம். 


•வெள்ளியுடைய நிஸாப் 200 திர்ஹமாகும். அதாவது 595 கிராமாகும். இதற்கு குறைய ஸகாத் கிடையாது. 


•இது அல்லாமல் உள்ள எந்தவித ஆபரணங்களுக்கும் ஸகாத் கிடையாது.


•வியாபாரப் பொருட்களில் ஸகாத் கடமை இல்லை. (வியாபாரப் பொருட்களுக்கும் ஸகாத் கடமை என்பதுதான் சரியான கருத்து) 


தாவர விளைச்சல்களுடைய ஸகாத் 

*******************************************


•பத்தில் ஒன்று (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 


•தொலிக் கோதுமை, வாட் கோதுமை, சோலகம், பேரீத்தம் பழம், திராட்சை என்பவற்றில் கடமையாகும். பத்தில் ஒன்று என்பது மழை நீரினால் விளைச்சல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். 


•உரிமையாளரின் சொந்த உழைப்பில் நீர் பாய்ச்சி விளைந்திருந்தால் பத்தில் ஒன்றில் அறைவாசி (5% சதவீதம்) கடமையாகும். 


•இதனுடைய நிஸாப் 5 வஸக்குகளாகும். 1 வஸக் 60 ஸாவாகும். 1 ஸா 2.5 கிலோ கிராமாகும். ஆக 5 வஸக்குகள் என்பது 750 கிலோ கிராமாகும். 


•இது தவிர வேறு எந்த தாவர விளைச்சல்களிலும் ஸகாத் கடமை இல்லை. 


•தேனில் பத்தில் ஒரு பங்கு (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 72 கிலோ கிராம் நிஸாபை அடைந்தால்.


ஸகாத்துடைய பொதுவான அடிப்படைகள் 

**************************************************

•ஸகாத்தை அவசரப்படுத்திக் கொடுப்பது கூடும்.


•ஆட்சியாளர் அந்தந்த பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஸகாத்தை அந்த பிரதேசத்திலே பகிர்ந்தளித்தல் வேண்டும். 


•ஆட்சியாளர் அநியாயக் காரராக இருந்தாலும் உரிய ஸகாத்தை ஒப்படைத்து விட்டால் அவருடைய கடமை முடிந்து விடும். 


ஸகாத் பெற தகுதியானவர்கள் / தகுதியற்றவர்கள்

*************************************************************

•8 கூட்டத்தினர் ஸகாத் பெற தகுதியானவர்களாவர். பரம ஏழைகள், ஏழைகள், இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் வசூலிப்பதற்காக உழைப்பவர்கள், இஸ்லாத்தை நேசிப்பவர்கள் / இஸ்லாத்தை ஆதரவு வைப்பவர்கள், அடிமைகள், கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள், வழிப்போக்கர்கள்.


•நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர் அவர்களால் அடிமை விடப்பட்டவர்கள் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


•பணக்காரர்கள், நல்ல முறையில் உழைத்து வருமானம் ஈட்ட முடிந்தவர்களும் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


ஸதகத்துல் பித்ர் (பெருநாள் தர்மம்) 

******************************************

•இதனுடைய அளவு 1 சாவாகும். (1 சா என்பது  2.5 கிலோ கிராமாகும்) 


•ஒவ்வொரு அங்கத்தினவர்களுக்கும் இது கடமையாகும். 


•அடிமைக்கு எஜமானும், குழந்தைகள் சிறுவர்களுக்கு அவர்களின் பொறுப்புதாரிகளும் கொடுக்க வேண்டும். 


•பெருநாள் தொழுவதற்கு முன் கொடுத்தாக வேண்டும். 


•அன்றைய தினம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லாதவர்கள் அல்லது அதற்கு போதுமான வசதியற்றவர்கள் அல்லது வேலைக்கு மட்டும் சாப்பிடுவதற்கு தேவையான வசதியைக் கொண்டவர்களுக்கு கடமை இல்லை. 


•ஸகாத் பெற தகுதியான 8 கூட்டத்தினருக்கும் இதனை வழங்கலாம். 


ஐந்தில் ஒன்று (20% சதவீதம்)  கொடுக்க வேண்டிய கட்டங்கள்

*************************************************************************


•யுத்த களத்தில் விடப்பட்ட கனீமத் சொத்துக்கள் 


•நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதையல். புதையல் தவிர நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எந்தப் பொருளிலும் கடமை இல்லை.

1 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 07


 துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 07


ஸகாத்

✴✴✴✴


பின்வருகின்ற சொத்துக்களில் ஸகாத் கடமையாகும் அதற்கு உரிமையாளர் கடமையாகின்ற குழுவில் இருந்தால்..


கால் நடைகள்

ஒட்டகம், மாடு, ஆடு


ஒட்டகத்தின் ஸகாத்

*********************** 

• 5 ஒட்டகங்கள் இருந்தால் ஒரு வருடம் பூர்தியான 1 ஆடு ஸகாத் கடமையாகும்.


• பின்னர் ஒவ்வொரு ஐந்திலும் 1 ஆடு கடமையாகும் (உ+ம் 10 ஒட்டகங்கள் = 2 ஆடுகள்) 


• 25ஐ அடைந்தால் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் கடமையாகும். 35 வரைக்கும் இதுதான் கணக்காகும் ( உ+ம் 20 ஒட்டகங்கள் = 4 ஆடுகள், 34 ஒட்டகங்கள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் ) 


• 36 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 45 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 45 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம்) 


• 46 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 60 வரைக்கும் இதே கணக்குதான். 


• 61 ஆகிவிட்டால் நான்கு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 75 வரைக்கும் இதே கணக்குதான். 


• 76 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 90 வரைக்கும் இதே கணக்குதான். 


• 91 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். 


• 120ஐ தாண்டிவிட்டால் ஒவ்வொரு நாற்பதிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். ஒவ்வொரு ஐம்பதிலும் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். (உ+ம் 150 ஒட்டகங்கள் = மூன்று வருடம் பூர்த்தியான 3 பெண் ஒட்டகங்கள், 200 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 4 பெண் ஒட்டகங்கள் அல்லது மூன்று வருடம் பூர்த்தியான 5 பெண் ஒட்டகங்கள்) 


மாட்டுடைய ஸகாத்

***********************

ஒவ்வொரு 30 மாடுகளிலும் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் கன்றோ அல்லது 1 ஆண் கன்றோ கடமையாகும். (உ+ம் 60 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 44 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 கன்று)


ஒவ்வொரு 40 மாடுகளிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் மாடோ 1 ஆண் மாடோ கடமையாகும். பின்னர் இதன் படியே கடமையாகும். (உ+ம் 70 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 100 மாடுகள் = இரண்டு வருடம் பூர்த்தியான 2 மாடுகள் அல்லது ஒரு வருடம் பூர்த்தியான 3 கன்றுகள்)


ஆட்டுடைய ஸகாத்

**********************

40 ஆடுகள் இருந்தால் 1 ஆடு கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 119 / 120 ஆடுகள் = 1 ஆடு)


121 ஆகிவிட்டால் 2 ஆடுகள் கடமையாகும். 200 வரைக்கும் இதே கணக்குதான். ( உ+ம் 119 / 200 ஆடுகள் = 2 ஆடுகள்) 


201 ஆகிவிட்டால் 3 ஆடுகள் கடமையாகும். 300 வரைக்கும் இதே கணக்குதான். 


301 ஆகிவிட்டால் 4 ஆடுகள் கடமையாகும். பின்னர் ஒவ்வொரு 100 ஆடுகளிலும் 1 ஆடு கடமையாகும். (399 வரைக்கும் 3 ஆடுகள்தான் என்பது பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்) 


சேர்ந்திருப்பதை பிரிக்கக் கூடாது பிரிந்திருந்த்தை சேர்க்கக் கூடாது. 


கடமையானதற்கு குறைய எதிலும் ஸகாத் இல்லை.


கூட்டாக செயற்படும் போது ஸகாத் கொடுக்கப்பட்ட பெருமதியை அதற்கேற்றாற் போல் பிரித்துக் கொள்ளல் வேண்டும். 


நோயுள்ள, அங்கக் குறையுள்ள, சின்னதாக மெலிந்த, குட்டி ஈன்றாதவைகளை ஸகாத் கொடுக்கக் கூடாது. உரிமையாளரிடமிருந்து அவர் நன்கு பராமரித்து விருப்பமாக வளர்த்து வந்ததை எடுக்கக் கூடாது

19 Aug 2021

ஊடகப் பயங்கரவாதம்..

 

ஊடகப் பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லாட்சி இருக்கிறது. ஆனால் என்னைக் கேட்டால் பயங்கரவாதத்தின் உயிர்நாடியே ஊடகங்கள்தான் என்பேன். 
 
ஏகதிபத்திய தேசங்கள் மற்றும் சர்வதிகார அரசுகளின் கனவுகள், நலவுகள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இப்படியான ஊடகங்களினாலே சாத்தியப்படுகிறது.
 
ஒரு இரையான்மையுள்ள நாட்டை தன்னுடைய அரசியல், புவியியல், பொருளியல் நலவுகளுக்காக ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்றால் அல்லது ஒரு நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை தங்களுடைய அரசிற்கு ஆதரவாக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தூண்டி விட வேண்டும் என்றால், அதற்கு தோதுவான ஒரு நாடகத்தை தயாரித்து ஒளிபரப்ப வேண்டும்.
 
 இதனை மிக நேர்த்தியாக நிறைவேற்றுகின்றன அதன் அடிமை ஊடகங்கள்.
மட்டுமல்லாமல் மக்களின் மனப்பாங்கை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு உச்சபட்சம் எனலாம். 
 
தன்னுடைய எஜமானின் எதிரிக்கு எதிராக, எதிராளிகளை உற்பத்தி பன்னுவதில் ஊடகங்களின் வகிபங்கு மிக மோசமானது.
 
இத்தகைய சூழ்ச்சிகள் நிறைந்த ஊடக வலைப்பின்னல்களுக்கு மத்தியில், நடுநிலை ஊடகங்களும் ஆங்காங்கே செயற்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் துரதிஷ்டம் அவைகள் பெரும்பாலும் மக்கள் மயப்படாத, வளங்கள் குறைந்த, மிகவும் அவல நிலையிலே காணப்படுகின்றன. 
 
விரும்பியோ விரும்பாமலோ ஊடகங்களினால் உள்ள உறவு இன்றியமையாததுதான். நாட்டு நடப்புக்கள், உலக விவகாரங்கள் போன்ற செய்திகளை தாங்கி நிற்பது ஊடகங்களே. 
 

ஆனால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்; விடயதான விடயப்பரப்பை பொறுத்து, சமூகத்தின் தூரநோக்கை கருத்திற் கொண்டு, ஊடகங்களின் தன்மைகளை அறிந்து, வெளிவரும் செய்திகளின் ஆல அகலங்களை புரிந்து அதனை துறைசார் நல்ல அறிஞர்களிடம் ஒப்படைத்து விளக்கம் எடுத்துக் கொள்வதே புத்தி சாதூர்யமானது. மேலும் நாட்டு சூழலுக்கும், சமூககத்திற்கும் துரும்பிற்கும் பயன்படாத விடயங்களில் அவற்றை அலட்டிக் கொண்டு கருத்துச் சொல்ல முற்படுவதை விட அவற்றை மௌனமாக கடத்துவது, காலம் அவற்றின் முடிச்சுக்களை லாபகமாக அவிழ்த்து விடும்...

17 Aug 2021

மனித சிந்தனை..

சிந்திப்பது, கேள்வி கேட்பது, ஆராய்வது எல்லாம் மார்க்கம் வழியுறுத்திய சிறந்த நடைமுறைகள். ஆனால் எமது சிந்தனை ஆற்றளுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அந்த கோடுகள்தான் வஹீ எனும் இறைவனின் செய்திகள். 
 
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எமது சிந்தனைகளையும், கேள்விகளையும் நாம் விரிவு படுத்துவது எம்மை வழிகேட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 
 
'அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால் அதில் இரண்டு கருத்திற்கும், மாற்று கேள்விக்கும், வியாக்கியனப்படுத்துவதற்கும் இடமில்லை. 
 
உள்ளதை உள்ளது போன்று நம்பிக்கை கொள்வதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் அகீதா. 
 
ஆனால் மாற்றுக் கொள்கை உடையோர் அதில் தங்களது சிந்தனையைப் பிரயோகித்து, கேள்விகளை அடுக்கி, 'அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால், ஒன்றில் அர்ஷின் மீது அல்லாஹ்வுக்கு தேவை ஏற்படுவதாக இருக்கும் அல்லது அர்ஷ் அவனை விட சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும். 
 
எனவே அதனுடைய விளக்கம் அல்லாஹ்வின் ஆட்சியைதான் குறிக்கும் என்று வஹீயை மீறிய சிந்தனையால் வழி தவறியுள்ளனர். 
 
அல்லாஹ்வின் சிருஷ்டிக்கும் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் எமது சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் ஆச்சரிய விளிப்பில் போய் முடிந்து விடும். 
 
அந்தளவிற்கு நுண்ணறிவாளனும், பேறாற்றல் மிக்கவனுமாகிய, அந்த ரப்புல் ஆலமீனின் சொல் வாக்கை அப்படியே ஏற்று அதன் எல்லையில் இருந்து நம்பிக்கை கொள்வதுதான் ஒரு முஃமினின் பண்பாகும். 
 
மனிதனுக்கு சொற்பத்திலும் சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வானம், பூமி, அண்ட சராசரங்களின் முடிச்சுக்களை அதன் படைப்பாளனைத் தவிர அவனுடைய படைப்பினங்களால் எப்படி அறிந்திட முடியும்?

 
சுபஹானல்லாஹ்!